என் உயிரை எடுத்து விடுங்கள் என ஜனாதிபதிக்கு உருக்கமாக கோரிக்கை விடுத்த சிறுமி!!(வீடியோ)

362

student
சிலி நாட்டில் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர், தன்னை கருணை கொலை செய்துவிடுமாறு அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிலி நாட்டை சேர்ந்த வாலென்டினா மவுரேய்ரா (14) என்ற சிறுமி, ‘சிஸ்டிக் பைபிரோசிஸ்’ என்னும் மரபணு நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவளது நுரையீரல் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நோயின் கடுமையை குறைக்க அவளால் உரிய சிகிச்சை பெற முடியவில்லை.

எனவே, இணைய தளத்தில் தனது வீடியோவை வெளியிட்டாள். அதில், சிலி அதிபர் மிச்செலி பாசெலெட்டுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

எனது தம்பி இதே நோயினால் 6 வயதில் உயிரிழந்தான். அதே நோய் தற்போது என்னையும் தாக்கியுள்ளது. நோயின் தாக்கத்தால் கடும் அவதியுறும் நான் உயிரை விட அதிபர் அனுமதி வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதனைத் தொடர்நது, அதிபர் மிச்செலி பாசெலெட் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்துள்ளார். நோயினால் அவதியுறும் அவளுக்கு ஆறுதல் கூறிய அவர் சிறுமி உயிரை விட அனுமதிக்க முடியாது என்றும், மேலும் அவரது சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என கூறியுள்ளார்.