வாகனத்திற்கான தவணைப் பணம் செலுத்த முடியாததால் நிதி நிறுவனத்திற்கு முன்னால் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட நபர்!!

357

fire

அம்பாறை மாவட்டத்தில் நிதி நிறுவனம் ஒன்றிற்குள் நுழைந்த நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தனது வாகனத்திற்கான தவணை கட்டணத்தை செலுத்த முடியாதுள்ளதாகத் தெரிவித்தே அவர் தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ காயங்களுக்குள்ளான நபர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.