செய்மதி உபகரணங்களுடன் விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் கைது!!

451

Airport

​செய்மதி இயந்திரங்கள் சிலவற்றுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.122 என்ற விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை வந்ததாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களின் பயணப் பொதியை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த செய்மதிகள் மீட்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதி 13 லட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.