உக்ரேனில் இடம்பெற்றுவரும் மோதல்களில் பலியானவர்கள் தொகை 6,000 ஐயும் தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர்கள் திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
மேற்படி மோதல்களால் உக்ரேனிலுள்ள பொதுமக்களது உயிருக்கும் உட்கட்டமைப்புக்கும் பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை மனிதாபிமானத்துக்கு எதிரான ஒரு குற்றமாக கருத முடியும் எனவும் மேற்படி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு உக்ரேனில் ஒரு வருடத்திலும் குறைந்த காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களிலேயே மேற்படி மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஸெய்த் அல் ஹுஸைன் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்டுள்ள யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.