வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் எட்டாம் நாளான நேற்று 27-03 -2015 வெள்ளிக் கிழமை காலை முதல்மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் காலையில் சங்காபிசேகம் நடைபெற்று பின்னர் தைலாப்பிய உற்சவத்துக்குரிய அபிசேகங்கள் நடை பெற்று மதியம் நேற்று பொழிந்த கடும் மழை காரணமாக உற்சவ மூர்த்திகளை அகிலாண்டேஸ்வர பெருமானின் பக்தர்கள் தங்கள் தோள்களில் சுமந்து உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வந்தனர் ..
மீண்டும் மாலை உற்சவத்துகுரிய அலங்காரங்கள் அபிசேகங்கள்மாலை 4.30மணிக்கு ஆரம்பமாகி வசந்தமண்டப பூஜையின் பின் மாலை ஏழு மணியளவில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடபவாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் திருவீதி உலா வந்த நிகழ்வு இடம்பெற்று இன்றைய திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
மேலும் அகிலாண்டேஸ்வரத்தில் உற்சவகாலங்களில் மகேஸ்வர பூஜை என்று சொல்லபடுகின்ற அன்ன தான நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெறுவதுண்டு. அகிலாண்டேஸ்வரதுக்கு வருகின்ற பக்தர்கள் மனநிறைவோடு இறைவனை வழிபட்டு பின்னர் அவர்கள் வயிறார உண்பதற்கு அன்னதானமும் வழங்கப்படுவது சிறப்பாகும்.