வவுனியாவில் கடையை உடைத்து திருடர்கள் கைவரிசை!!

597

vavuniya

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள கடை ஒன்று உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று(30.03) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள அழகுபொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் கூரை வழியாக உள்நுழைந்த திருடர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் மேசை ஆகியவற்றை உடைத்து அதில் இருந்த பணத்தையும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் களவாடிச் சென்றுள்ளனர்.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபா வரையிலான பணம் திருடப்பட்டுள்ளதாகக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.