கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் ஏப்ரல் 2ம் திகதி திரைக்கு வரவிருக்கும் படம் கொம்பன். இப்படத்தில் ஒரு சாதியினை இழிவுப்படுத்தியதாக கூறி, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதற்கு படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ‘ஏப்ரல் 2 அன்று எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கொம்பன்’ திரைப்படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் எந்த ஒரு சாதியைக் குறிப்பிடும் வசனங்களோ, காட்சியமைப்போ இடம்பெறவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தில் மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம்.
யூகத்தின் அடிப்படையில் ‘கொம்பன்’ திரைப்படத்தைப் பற்றி தவறான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. ‘கொம்பன்’ திரைப்படம் மக்களை சென்றடைவதற்கு முழுமையான ஒத்துழைப்பு தரும்படி வேண்டுகிறேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.