பூனைக்கு பால் கொடுக்கும் நாய் : ஓர் அதிசய சம்பவம்!!

767


அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆகுரோவா தோட்டத்தில் நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய சம்பவம் இத்தோட்ட மக்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாயும் பூனையும் என்றால் எதிரிகளாகவே இருக்கும். சில சமயங்களில் நண்பர்களாகவும் இருக்கும். ஆனால் அதுவும் அபூர்வமாகதான் இருக்கும். அவ்வாறான அபூர்வமான காட்சிதான்
ஆகுரோவா தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் இடம்பெற்றுள்ளது.



சௌந்தராஜன் என்பவர் செல்லப் பிராணிகளாக குறித்த நாயையும் பூனையையும் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் பசியில் தவிக்கும் பூனை குட்டிக்கு பாசத்துடன் நாய் பாலூட்டி வருகின்றது.

இந்த அதிசய சம்பவத்தை பார்வையிட பிரதேச மக்கள் பலர் தமது வீட்டுக்கு வருவதாக சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.



D1 D2