25 வருடங்களின் பின் தலைமன்னாருக்கான ரயில் சேவை ஆரம்பம்!!

405

Train

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கடந்த 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, ஹோமாகம முதல் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய ஹோமாகம தொடக்கம் கோட்டை ரயில் நிலையம் வரையிலான ரயில் சேவை இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், 25 வருடங்களின் பின்னரான கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்று மாலை 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவணைகள் இன்று தொடக்கம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.