எதிர்பார்த்த பரீட்சை பெறுபேறு கிடைக்காததால் மேலும் இரு மாணவிகள் தற்கொலை முயற்சி!!

384

Sucide

அட்டன் புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 17 வயதுடைய மற்றும் 18 வயதுடைய ஆகிய இரு மாணவிகள் பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

பரீட்சை பெறுபேற்றை பார்த்த இவ்விரு மாணவிகளும் நினைத்த பெறுபேறு கிடைக்காததால் இவ்வாறு தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் ஒரு மாணவி கால்நடைகளுக்கு வழங்கப்படும் மாற்று மருந்தை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உடனடியாக அயலவர்கள் இவர்களை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது இரு மாணவிகளும் உடல் நலத்தோடு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்பலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.