திடீரென கிராமத்திற்குள் புகுந்து 30 பேரின் தலையை துண்டித்த தீவிரவாதிகளின் வெறிச்செயல்!!

510

TR

ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து 30 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய சிரியா மாகாணத்தில் உள்ள ஹாமாவின் அல் மபுஜாக் கிராமத்திற்குள் நேற்று புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகி உள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

காலை 2.30 மணியில் இருந்து 6.30 மணிவரை நடந்த இந்த தாக்குதலில், பலரின் தலைகளை துண்டித்தும், தீவைத்து எரித்தும் கொன்றுள்ளனர்.