உலகின் மூத்த பெண்மணி 117 ஆவது வயதில் மரணம்!!

336

உலகின் மூத்த பெண்மணியாக கருதப்படுகின்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிசாவோ ஒகாவா இன்று புதன்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒகாவா இம்மாதம் 5 ஆம் திகதி தனது 92 வயது மகனுடன் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். ஏற்கனவே சுகயீனமுற்றிருந்த அவருக்கு பசியின்மை அதிகரித்து வந்தது. இந்நிலையிலேயே தனது 117 ஆவது வயதில் அவர் மரணத்தை தழுவினார்.

உலகில் அதிகூடிய வயதான பெண்மணி என்ற பெருமைக்குரியவராக 2013 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவானார் ஒகாவா.

நிறையுணவு, தினமும் 8 மணிநேர நித்திரை, உடற்பயிற்சி போன்றவையே நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகுத்ததாக ஒகாவா ஆங்கில நாளிதழுக்கு வழங்கியிருந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.

ஒகாவா 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு 114 வயதாகும் போது உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் இடம்பெறுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

123