இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.