தாயையும், சகோதரியையும் கொலை செய்த இளைஞன்!!(படங்கள்)

318

நுவரெலியா, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கொலை செய்யபட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் 52 வயதுடைய ஆண்டி பேச்சாய் என்ற தாயும் 32 வயது மதிக்கத்தக்க பெரியசாமி நித்தியகல்யாணி எனும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இக்கொடூர சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொலையை புரிந்தவர் தப்பியோடி தலை மறைவாகியுள்ளார். சந்தே நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற நாவலப்பிட்டி நீதவான் எம்.கே. மகிந்த மரண விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, பொலிஸார் சந்தேகிக்கும் சந்தேக நபரான குறித்த தாயின் மகனை தேடி வருகின்றனர்.

1 2 4 5 6