கிளிநொச்சியில் வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழப்பு!!

564

Accident

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் 42 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திர தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு 142 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 38 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதுடன் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் இடம்பெற்ற 42 விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளமை கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் அதிகரித்த தொகையாகும். எனவே வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.