வவுனியாவில் பொலிசாரின் ஏற்பாட்டில் புத்தாண்டு களியாட்ட நிகழ்வு!(படங்கள் வீடியோ)

629

வவுனியா போலிஸ் மற்றும் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் நெஸ்டமோல்ட் பால்மா அனுசரணையில் நேற்று 20.042015 திங்கட்கிழமையன்றுசிங்கள தமிழ்  புத்தாண்டு களியாட்ட நிகழ்வு வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது .

நேற்றைய புத்தாண்டு நிகழ்வின் போது வவுனியாவின் மூன்றுமுறிப்பு  வவுனியா நகரம் நெலுக்குளம் மடுகந்த மற்றும் மாமடு ஈரப்பெரிய குளம் ஆகிய போலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் ஏராளமான விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தனர் .

காலையில் யானைக்கு கண்வைத்தல்  முட்டி உடைத்தல் கிடுகு பின்னுதல் கிரீஸ் மரம் ஏறுதல் மற்றும் தலையணை சண்டை கயிறுழுத்தல் என ஏராளமான போட்டிகள் இடம்பெற்று  மாலையில் இந்த ஆண்டுக்கான அழகிகளை தெரிவு செய்யும்  புத்தாண்டு அழகுராணி போட்டியும் இடம்பெற்றது .பத்து வயது முதல் இருபது வயது வரையான தமிழ் மற்றும் சிங்கள யுவதிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டு  தம்மிடம் உள்ள விசேட திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர் .

தொடர்ந்து போலிசாரின் சிக்மா இசைக்குழுவின் பிரமாண்டமான இசைநிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

20150420_191128 20150420_191140 20150420_193437

20150420_192910

20150420_191140