வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டுஇடம்பெற்ற விசேட இரத்தான நிகழ்வு!(படங்கள் வீடியோ)

366


வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட இரத்தான நிகழ்வுஇன்றுகாலை (24.04.2015 வெள்ளிகிழமை) பாடசாலைமண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திரேஸம்மா சில்வா தலைமையில் இடம்பெற்றது .மேற்படி நிகழ்வு இலங்கை செஞ்சிலுவை சங்க வவுனியா கிளையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது .மூன்று கட்டமாக இடம்பெற உள்ள இரத்ததான முகாமின் முதல் கட்டமே இன்று இடம்பெற்றது .

இன்றைய இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து உரையற்றிய கல்லூரி அதிபர் திரேசம்மா சில்வா குறிப்பிடுகையில் இந்த கல்லூரியானது 125 ஆண்டுகள்  தொடர்சியாக பெண்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி வருவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் நல்ல பிரயைகளையும் உருவாக்குவதில் முன்னுதாரணமாக விளங்குகின்ற பாடசாலை எனவும் இந்த பாடசாலையின் 125 வருடகால சேவைகாலத்தை முன்னிட்டு தாம் இந்த விசேட இரத்ததான நிகழ்வை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.



இன்றைய இரத்ததான நிகழ்வில் கல்லூரி சமூகத்தை சார்ந்த ஆசிரியர்கள் மாணவர்களுடன் பெற்றோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .  .

மேற்படி இரத்ததான நிகழ்வின் அடுத்த கட்டங்கள் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி பிரதான மண்டபத்தில்



இரண்டாவது கட்டம் 06.05.2015(புதன்கிழமையும் )



மூன்றாவது கட்டம் 13.05.2015(புதன்கிழமையும்  )


காலை 9.30 மணிமுதல் இடம்பெற உள்ளது . மேற்படி இரத்ததான  நிகழ்வில் பங்குகொள்ள விரும்பும்  மாணவர்கள்  ஆசிரியர்கள் பழையமாணவர்கள்  பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் தங்களது பெயர்களை  பாடசாலை அதிபர் அலுவலகத்தில் பதிவு செய்யும் வண்ணம் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.



20150424_115249 20150424_115347 20150424_115352 20150424_115401 20150424_115409 20150424_115415 20150424_115422 20150424_115432 20150424_115517 20150424_115550 20150424_121250