வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் தரம் ஒன்று மற்றும் தரம் இரண்டு மாணவர்களை உள்ளடக்கிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நேற்று காலை (24.04.2015 வெள்ளிகிழமை ) ஒன்பதுமணிளவில் கல்லூரியின் அதிபர் திரேசம்மா சில்வா தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஆரம்பபிரிவின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அழகிய வண்ண ஆடைகளை அணிந்த மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டும் மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த பட்சணங்கள் மற்றும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு மகிழ்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.