வவுனியா கோவில் குளம் அருள் மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சமய நாற்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனாரது குருபூசை தினம் இன்று சிறப்பாக அனுஸ்டிக்கபட்டது.
திருநாவுக்கரசு நாயனார் குருபூசையை முன்னிட்டு இன்று காலை முதல் பிற்பகல் வரை கோவிலின் வாசலில் தாக சாந்தி நிலையம் அமைத்து அடியார்களுக்கு மோர் மற்றும் குளிபானம் மற்றும் தண்ணீர் என்பன வழங்கப்பட்டது .மிகவும் வெப்பமான காலநிலையில் அவ்வழியால் பயணித்த அடியவர்கள் தங்களது தாகத்தை தனித்து சென்றனர் . இன்று மாலையில் திருநாவுக்கரசு நாயனர்ர் குருபூசை வெகு சிறப்பாக இடம்பெற்றது.