வவுனியா பூந்தோட்டத்தில் நாளை நடைபெறவுள்ள புங்குடுதீவு மாணவி வித்தியாவின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டம்!!

560

vithiya

கடந்தவாரம் மிகவும் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனைக் கூட்டம் ஒன்று நாளை காலை 9.00 மணியளவில் பூந்தோட்டம் சந்தியில் நடைபெறவுள்ளது.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையினர் இப் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இப் பிரார்த்தனைக் கூட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

-பாஸ்கரன் கதீசன்-