வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவர்களின் வித்தியா படுகொலைகெதிரான ஆர்ப்பாட்டம்!(படங்கள்)

918


கடந்தவாரம்கூட்டு  பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன்  படுகொலையைக் கண்டித்து வவுனியா  புதுக்குளம் மகா  வித்தியாலய மாணவர்கள் இன்று(20.05.2015) காலை 8.30 மணியளவில் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியின் இருபுறமும் அணிவகுத்து   நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள்  கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதன் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும் கொலையாளிகளுக்கு சரியான தண்டனை  வழங்கப்பட வேண்டுமெனவும் வலியிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .



படங்கள் :முருகதாசன்  

22392_970364099640385_7855418308580380227_n 11231797_970364129640382_4548347181753398613_n 11257571_970364162973712_7056155137973511809_n 20 214971325761_03879fca09_z