வவுனியா வளாக மாணவர்கள் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து போராட்டம்!!(படங்கள்)

273

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ். பல்கலைக்கழத்தின் வவுனியா வளாக மாணவர்கள் இன்று (25.05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழத்தின் வளாகத்தின் முன் ஒன்று கூடிய மாணவர்கள், வித்தியாவின் படுகொலைக் குற்றவாளிகளை தூக்கில் போடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் கூரை மேல் ஏறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் படுகொலையைக் கண்டித்து கடந்த 22ம் திகதி வவுனியா வளாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

-சுதர்சன் –

image-0d9e9d346d66d78e406f49db330a489b22fab65e26edaa3932bb030ef66f8291-V image-0f90400e04767caaf3c29f6aef0592378ab6f64502eda4b7242e0f9aec4b5e53-V image-73e631eed092fcace2b84cac6e821bc62b4fef671bf363249b142fbe6a389328-V image-431268c6fadd1c0810d7148ca1df2fcdba8403eb1532b9c350a5393dcef14c3a-V image-36309017cf639fa6356ebd6582821d0b73839b7611953273ad7add855a0803c6-V image-c1f16523ff47e52ee2a1dd57e49d599c6b97430dded6ee2bcf3dc37584e9fd9d-V image-f3ee9c60aaa2c788dc0a722bbad7052e843f89e70798b43e0243d4a39bba7497-V