வவுனியாவில் உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு மாமனார் பலி : மருமகன் வைத்தியசாலையில்!!

547

VVV

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தை செப்பனிட்டுக்கொண்டிருந்தவேளை, எதிர்பாராத விதமாக இயங்கிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மற்றவர் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(25.05) திங்கட்கிழமை காலை உழவு வேலைக்காக உழவு இயந்திரத்தில் கலப்பையை சரி செய்துகொண்டிருந்தவேளை உழவு இயந்திரம் திடீரென இயங்கி முன்னோக்கி செல்லத்தொடங்கியுள்ளது.

இதனால் உழவியந்திரத்திற்கு அருகாமையில் அமர்ந்திருந்த உழவு இயந்திரத்தின் உரிமையாளரின் மாமனாரான 80 வயதான பொன்னம்பலம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதன்போது உழவு இயந்திரத்திற்குள் அகப்பட்ட உரிமையாளரான செல்வரட்ணம் என்பவர் ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.