13 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக சுதந்திரத்தை அனுபவிக்கும் சிங்கம் : பார்ப்பவரை நெகிழ வைக்கும் காட்சி!!(காணொளி)

518

Lion

13 ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கமொன்று முதல் முறையாக திறந்தவெளியொன்றில் திறந்து விடப்பட்ட போது, சந்தோசத்தில் பூமியில் உருண்டு புரளும் அதன் செயற்பாடுகள் பார்ப்பவரின் இதயத்தை நெகிழ வைப்பதாக உள்ளது.

பிரேசிலில் உள்ள சாகச நிறுவனமொன்றில் 13 ஆண்டுகளாக கூண்டில் அடைப்பட்டு இருந்த ‘வில்’ என்ற பெயருடைய சிங்கம் ஒன்றே முதல் முறையாக கூண்டை விட்டு திறந்து விடப்பட்டது.

கூண்டை விட்டு வெளியில் வந்த குறித்த சிங்கள் சந்தோசத்தில் தன் கால்களால் மண்னை கிளரி, புள்வெளியில் படுத்து புரண்டு செய்வது அறியாமல் அங்குமிங்கும் ஓடும் காணொளியானது அனைவரினதும் மனதையும் நெகிழ வைத்துள்ளது.

குறித்த வீடியோ காட்டிசியானது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு ஐந்து அறிவு கொண்ட ஜீவன்களை கூண்டில் அடைத்து வளர்ப்பதற்கு எதிராக விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.