செல்வராகவன்- சிம்பு படத்தில் நடந்த ஆச்சரியம்!!

220


Simbu

திரையுலகில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நடக்கும். அப்படித்தான் இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திலும் நடந்திருக்கிறதாம். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே 14 அன்று தொடங்கியது.



தொடக்கத்தில் சில நாட்கள் தினமும் இரவிலும் அதன்பின் பகலிலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. சென்னையில் சூளைமேடு மற்றும் கிண்டி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

முதல்கட்டப் படப்பிடிப்பு பனிரெண்டுநாட்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டதாம். அந்தப் பனிரெண்டு நாட்களில் எடுக்கவேண்டிய காட்சிகள் எல்லாவற்றையும் ஒன்பது நாட்களில் எடுத்து முடித்துவிட்டாராம் செல்வராகவன். எடுத்து முடித்தபிறகுதான் படக்குழுவினருக்கே அந்தவிசயம் தெரிந்திருக்கிறது.



ஏதேனும் விட்டுப்போய்விட்டதா என்று எடிட்டிங் டேபிளில் சோதித்துப் பார்த்தும் திட்டமிட்ட காட்சிகள் எல்லாம் இருக்கின்றன என்று தெரிந்து வியப்படைந்திருக்கிறார்கள். செல்வராகவன் ,சிம்பு ஆகிய இரண்டு பேர் இருக்கும் படப்பிடிப்பு இவ்வளவு வேகமாக நடந்ததுதான் மிகவும் வியப்புக்குரிய செய்தி என்று பேசிக்கொள்கிறார்கள்.



அதேசமயம், இப்படி நடந்ததற்குக் காரணம், செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிதான் என்றும் சொல்கிறார்கள். அவர்தான் தயாரிப்பு நிர்வாகத்தைக் கவனிக்கிறாராம். எல்லோரிடமும் இயல்பாகப் பேசி வேலை வாங்குவதால் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடக்கிறது என்று சொல்கிறார்கள்.