வவுனியாவில் ஆசிரியரால் 3 சிறுமிகள் துஸ்பிரயோகம்!!

361

Abuse

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் கல்வி பயின்ற மூன்று சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா பிரதேச செயலாளரினால் சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசாருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பபட்டுள்ளது.

அங்க சேட்டைகள் விடுதல், தகாத வார்த்தைகள் பிரயோகித்தல் என பல்வேறுபட்ட குற்றச்சாட்டு்ககள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பிரதேச செயலக சிறுவர் பெண்கள் அலகில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக பிரதேச செயலர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியர் முன்னரும் வேறு பாடசாலை ஒன்றில் மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தார் என முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் அதன் வழக்கு வலுவிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.