இன்புளுவன்சா வைரஸ் குறித்து எச்சரிக்கை : இதுவரை எழுவர் பலி!!

345

virus

இன்புளுவன்சா வைரஸ் விரைவில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட 143 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் இன்புளுவன்சா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதாக பபா பலிஹவடன கூறினார்.