வித்தியாவின் கொலையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

444

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் நடைபெற்றது.

நாட்டின் பாடசாலை மாணவர்களான 40 லட்சம் பேரில் பாதுகாப்பு தொடர்பில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மாத்திரமல்லாது பிரஜைகளும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

v1 v2