கிளிநொச்சி – கோரக்கன் கட்டு குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை காணாமல் போயிருந்த சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
12 வயதுடைய குறித்த சிறுமி நேற்று மாலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்த சிறுமி ராசையா கமலேஷ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீர் அள்ளுவதற்காக அருகில் உள்ள வீட்டு கிணற்றிற்கு சென்றிந்ததாகவும், பிள்ளையை 11 மணியிலிருந்து காணவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் தாய் வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும், குறித்த சிறுமியும், தம்பியும் சகோதரியின் பராமரிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமியின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்டப்டுள்ளாக தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.