வவுனியா மாவட்டத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களில் தேசிய நீரியல் வளங்கள் அதிகாரசபையால் தெரிவுசெய்யப்பட்ட 17 சங்கங்களுக்கு சுமார் 220 கதிரைகளும், மானிய அடிப்படையில் மீன்பிடி வலைகளும் வடமாகாண மீன்பிடி அமைச்சால் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெற்ற இன் நிகழ்விற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும்,
வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, எம்.பி.நடராஜா, ஜெயதிலக ஆகியோரும் வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் அவர்களும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரின் இணைப்பு செயலாளர் திரு.ப.ஜெரோம் எமிலியானுஸ்பிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.