வவுனியா போபஸ்கம மாமடுவ மக்கள் வீதியைப் புனரமைக்குமாறு கோரி போராட்டம்!!(படங்கள், காணொளி)

271


வவுனியா போகஸ்கம மாமடுவ மக்கள் வீதி திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோரி போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

(07.06) நேற்று காலை தமது பிரதேச 17 கிலோ மீற்றர் வீதியை விரைவில் திருத்தித் தருமாறு புதிய அரசாங்கத்திடம் கோரி போகஸ்கம மாடுவ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியின் முன்பக்கம் குறுக்காக பெருமளவான மக்கள் ஓன்று கூடி பதாதைகளை தாங்கி போராட்டத்தை மேற்கொண்டனர்.



இதன்போது எந்தவொரு கனகரக வாகனமும் இவ்வீதியால் செல்லவிடாது போராட்டதில் ஈடுபட்டமக்கள் மறித்தனர். இதன்போது அங்குவந்த பொலிசார் வாகனங்கள் பயணிக்க ஒழுங்கு செய்தனர். இதனால் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த  வவுனியா மாவட்ட அரச அதிபர் மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது பொதுமக்களால் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.



-பாஸ்கரன் கதீசன்-




DSC03512 DSC03514 DSC03516 DSC03518 DSC03519