வவுனியா புளியங்குளம் புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் கும்பாபிசேக தினமான நேற்று 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை காலை அபிசேகங்கள் இடம்பெற்று மாலையில் மணவாள கோல உற்சவமும் இடம்பெற்றது.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெரு விழா எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளநிலையில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் தொடர்பாகவும் ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன .