வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் நடாத்திய பாடசாலைகளுக்கு இடையிலான வினா விடைப்போட்டி!!(படங்கள், காணொளி)

328

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சாரசபையும் இணைந்த நடாத்தும் மின்சாரம் தொடர்பான வினா விடைப்போட்டி இன்று 09.06.2015 காலை 9 மணியளவில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தின் ஜயாத்துரை மண்டபத்தில் இலங்கை மின்சாரசபையின் மேலதிக பொது முகாமையாளர் திரு.பந்துல திலகசேன தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி எதிர் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மற்றும் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் எதிர் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி என்பனவற்றிற்கு இடையில் போட்டி இடம்பெற்றது.

2014ஆம் ஆண்டில் நாடு முழுவதுமான 94 தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் போட்டி நடைபெற்றது. இவ் அரையிறுதிச்சுற்றில் நான்கு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியே இன்று இடம்பெற்று இதில் வெற்றிபெறும் பாடசாலை அணி இறுதிப்போட்டியில் கொழும்பில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும்.

இன் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, இலங்கை மின்சாரசபையின் பிரதி முகாமையாளர் ,பொறியியலாளர் எஸ்.பி.கே.கமகே, வவுனியா தமிழ் மகாவித்தியாலய அதிபர் திரு சீ. மரியநாயகம். இலங்கை மின்சார சபையின் வவனியா பிரதேச பிரதான மின் பொறியியலாளர் திரு. எஸ்.பிரபாகரன். ஆகியோரும் அரச. அரசசார்பற்ற பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டனர்.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-

OLYMPUS DIGITAL CAMERA 2 3 4 5 6 7