ஆடைப் பெட்­டியில் மறைத்து ஸ்பெயி­னுக்கு கடத்­தப்­பட்ட சிறுவன் தாயுடன் இணைந்தான்!!

256

ஆடைப்­பெட்­டியில் மறைத்து வைத்து ஸ்பெயி­னுக்கு கடத்­தப்­பட்ட நிலையில் கடந்த மாதம் எல்லைக் காவல் அதி­கா­ரி­க­ளிடம் சிக்­கிய 8 வயதுச் சிறுவன் தனது தாயா­ருடன் மீள இணைந்துள்ளான்.

ஐவரிகோஸ்ட்டைச் சேர்ந்த அடோயு குவாட்டரா என்ற சிறு­வனே தனது தாயாரான லூஸி குவாட்ட­ரா­வுடன் இணைந்துள்ளான். லூஸியும் அவ­ரது கண­வரும் ஸ்பெயின் தீவான கனே­ரியில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

ஸ்பெயி­னுக்கு வந்து அங்கு 7 வரு­டங்­க­ளாக சட்­ட­பூர்­வ­மாக தங்­கி­யி­ருந்த தனது கண­வ­ருடன் இணைந்து கொண்­டி­ருந்த லூஸி, தனது இரு பிள்­ளை­களை தம்­மிடம் அழைத்து வரும் முயற்சியில் ஈடு­பட்டார். இந்­நி­லையில் அவ­ரதும் அவ­ரது கண­வ­ரதும் வரு­மானம் இரு பிள்­ளை­களை வளர்ப்­ப­தற்கு அதி­கா­ரி­களால் மதிப்­பி­டப்­பட்ட தொகை­யிலும் சிறிது குறை­வாக இருந்­ததால், அவர்­க­ளுக்கு அவர்­க­ளது மூத்த பிள்­ளை­யான 11 வயது மகளை மட்­டுமே வர­வ­ழைக்க அனு­மதி அளிக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் தமது மக­னான அடோ­யுவை அழைத்­து­வர முடி­யா­ததால் சோகத்தில் வாடிய லூஸிக்கு ஆறு­த­ல­ளிக்க வழி­வகை தெரி­யாத அவ­ரது கணவர், மொரோக்­கோவைச் சேர்ந்த பெண்ணொ­ரு­வ ­ருக்கு பெரு­ம­ளவு பணத்தைச் செலு த்தி தமது மகனை சட்­ட­வி­ரோ­த­மாக ஸ்பெயினுக்கு கடத்தி வர ஏற்­பா­டு­களை மேற்­கொண்டார்.

இந்­நி­லையில் அந்த மொரோக்கோ பெண் அடோயுவை ஆடைப் பெட்­டியில் மறைத்து வைத்து ஸ்பெயி­னுக்கு கடத்தி வந்த போது எல்லைக் காவல் அதி­கா­ரி­க­ளிடம் சிக்கிக் கொண்டார்.

இத­னை­ய­டுத்து மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களின் போது சட்­ட ­வி­ரோ­த­மாக மகனை ஸ்பெயினுக்குள் அழைத்­து­வர முயற்­சித்த குற்­றச்­சாட்டில் அடோ­யுவின் தந்தை கைதுசெய்யப்பட்டார்.

தற்­போது ஒரு மாதம் கழித்து அடோயு தனது தாயாரான லூஸி­யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.இதன்­போது மீளவும் இணைந்து கொண்ட தாயும் மகனும் ஒருவரையொ­ருவர் கட்­டி­ய­ணைத்து கண்ணீர் சிந்­தி­யமை அதி­கா­ரிகள் உட்பட அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்ததாக கூறப்படுகிறது.

அடோயுவின் தந்தையையும் விரைவில் பிணையில் விடுதலை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

B1 B2