வவுனியா பொது வைத்தியசாலையில் குருதிக் கொடையாளர்தினம்!!(படங்கள், காணொளி)

540

வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியினால் இன்று(12.06.2015) குருதிக் கொடையாளர்தினம் கொண்டாடப்பட்டது.

வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்ட இவ் வைபவத்தில் பிரதமவிருந்தினராக வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் இரத்த வங்கி வைத்திய நிபுணர் ஆர்.எம்.குணரட்ண ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் குருதிக்கொடையாளர்கள் குருதிக்கொடை வழங்கும் முறை மற்றும் பயன்பாடுபற்றி விளக்கம் அளிக்கபட்டது.

10 தடவைக்கு மேல் குருதி வழங்கிய 140 பேர் கௌரவிக்கப்பட்டனர். இதில் 80 குருதிக் கொடையாளர்களும், 60 இரத்தமுகாம் ஒழுங்கமைப்பாளர்களும், 30 தடவைக்கு அதிகமாக குருதி வழங்கியவர்களான ஆர்.ஜி.எஸ்.ராஜபக்ச மற்றும் குணரட்ண அத்துடன் 15 தடைவைக்கு மேல் இரத்தமுகாம்களை ஒழுங்கு செய்தவர்களான குசும்காந்தி, விசேட அதிரடிபடையினர், சதீஸ்குமார், ஜனாதிபதி சாரணியமன்றம் வவுனியா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீஷன்-

20150612_094715 20150612_094725 20150612_094815 20150612_094828 20150612_095011 20150612_095118 20150612_095135 20150612_095202 20150612_095316 20150612_101021_Night 20150612_101503 20150612_101611 20150612_101909 20150612_102204 20150612_102806 20150612_102831 20150612_103834