வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி நேற்று (13.06.2015) காலை குருமுதல்வர் விக்ரர் சோசை தலைமையில் இடம்பெற்றது.
திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹொறவப்பொத்தான வீதி வழியாக சென்று மறுபடியும் ஆலயத்தினை வந்தடைந்தது.
இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ், வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை லக்ரன் டி சில்வா, அமலமரித்தியாகிகள் சபைக் குருக்கள் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு மக்கள், அயல் பங்குமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-