மலையகத்தின் மீரியபெத்த – கொஸ்லந்த பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்ட போது வவுனியா உதவும் கரங்கள் அமைப்பினூடாக திரட்டப்பட்ட நிதியினை உதவும் கரங்கள் அமைப்பினர் நேற்று முன்தினம் 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி நிலையத்திற்கு நேரடியாகச் சென்று உலர் உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, உப்பு சோயாமீற், ரின்மீன் மற்றும் பெட்சீற் விரிப்புக்கள் என்பவற்றை அம் மக்களிடம் கையளித்தனர்.
இதன்போது சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் நுவரெலியா மாவட்ட முக்கியஸ்தர் வெ.மகேந்திரன் மற்றும் மாத்தளை மாவட்ட சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பிரதிநிதி எஸ்.மோகன்ராஜ், வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் உறுப்பினரும், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் ஆகியோர் குறித்த உதவி வழங்கும் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.