பேய்ப் பயத்தினால் ஊரைவிட்டு வெளியேறிய கிராமத்தினர்!!

330

Devil

கிருஷ்ணகிரி கிராம மக்கள் ஆவிகள் தொல்லை தாங்க முடியாமல் ஒன்று திரண்டு ஒரு நாள் முழுக்க ஊரைவிட்டு வெளியேறி ஆவியை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள அம்மனேரி கிராமத்தில் சென்ற வாரம், ஆவிகள் அட்டகாசம் தாங்கவில்லை என ஊர் மக்கள் ஒன்று திரண்டு ஆடு வெட்டி பலி கொடுத்து ஆவியை விரட்ட சிறப்பு பூஜைகள் செய்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இதே போல் நேற்றைய தினம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்தி கூரி என்ற கிராமத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு விதவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டதால் அதற்கெல்லாம் ஆவிதான் காரணம் என ஊர் மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதையடுத்து நேற்று ஊரைவிட்டு வெளியேறிய கிராம மக்கள், வனப்பகுதிக்கு சென்று ஊர்மக்கள் எல்லோரும் தங்கள் குலதெய்வத்தை வணங்கி விட்டு திரும்பியுள்ளனர்.