பிரபல பாம்பு பிடி வல்லவரான வாவா சுரேஷை கடித்த பாம்பு : தீவிர சிகிச்சை(வீடியோ)

562


Snake

திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பதில் வல்லவரான வாவா சுரேஷ் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.



பாம்பு பிடிப்பதில் திறமைசாலியான வாவா சுரேஷ், வீடுகள், அலுவலகங்கள் மறறும் குடியிருப்புகளில் வரும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் சென்று விட்டுவிடுவார்.

இதற்காக அவர் யாரிடமும் பணம் வாங்குவது இல்லை. இதுவரை ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளையும், 30க்கும் மேற்பட்ட ராஜ நாகங்களையும் பிடித்துள்ளார்.



இதனால் வனத்துறையில் அவருக்கு வேலை கொடுக்க கேரள அரசு முன் வந்த போதும், அதை ஏற்க அவர் மறுத்து விட்டார்.



இதுவரை 250க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் அவரை கடித்த போதும், 9 முறை மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள வீடொன்றில் புகுந்த நல்லபாம்பைப் பிடிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக அந்தப் பாம்பு அவரது கையில் கடித்துள்ளது.

பாம்பு கடித்ததால் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்த அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் இன்னும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.