வவுனியாவில் இன்று காலை 8.30 மணியளவில் போதைப் பொருட் பாவனை சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறை என்பவற்றுக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது காலை 8.30 மணியளவில் குழுமாட்டுச்சந்தியில் ஆரம்பமாகி நெளுக்குளம் வீதி வழியாக வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தை வந்தனடந்தது
இன் நிகழ்வானது பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.மாணிக்கவாசகம், செல்வி இ.கந்தையைா மற்றும் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய அதிபர் சு.அமிர்தலிங்கம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது
இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பூவரசங்குளம் மகா வித்தியாலயம், பாவற்குளம் கனேஷ்வரா மகா வித்தியாலயம், கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம், கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நெளுக்குளம் பாடசாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு மதுபானசாலைகள் அமைந்துள்ளன. இம் மதுபானசாலையை கடந்து தினசரி 900க்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதருகின்றனர்.
இம் மதுபானசாலையிலை முடுமாறு பாடசாலை சமூகம் உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது.
இன்றைய ஆர்பாட்டத்தில் மாணவர்கள் குளுமாட்டுச்சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலை முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தது
-பிராந்திய செய்தியாளர்-