வவுனியா மாவட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கலந்துரையாடல் நேற்று (26.06.2015) காலை 10 மணியளவில் வவுனியா வாடிவீடு கேட்போர் கூடத்தில் முன்னாள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் வரவிருக்கும் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும். பெருமளவான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-