வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மாபெரும் பாற்குட பவனி!!

280

கடந்த வருடம் புதுக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது சிவபுரம் சிவாலயத்திலிருந்து பாற்குடங்கள் பவனியாக எடுத்து வரப்பட்டு சித்திவிநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதே போன்று இவ்வருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வருடாந்த திருவிழாவின் நிறைவு நளான சங்காபிஷேக தினமான திங்கட்கிழமை (29.06.2015) காலை 8.30 மணியளவில் சிறப்பான முறையில் இடம்பெறவுள்ளது.

பாற்குட பவனியைத் தொடர்ந்து சங்காபிஷேகமும் விசேட பூசைகளும் நடைபெற்று அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

மாலை நிகழ்வுகளாக விசேட அபிஷேகப் பூசைகளைத் தொடர்ந்து விநாயகப்பெருமானின் வீதிஉலா நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பக்திகானங்கள் இசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இன் நிகழ்வுகள் அனைத்திலும் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.

11215813_824072914328252_7001629437570656360_n 11350598_824072127661664_2151666929182627374_n