சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியுடன் ஓய்வுபெற உள்ளதாக குமார் சங்கக்கார இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார்.