பெரியாறு ஆற்றை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற சிறுவன்!!

832


Boy

கேரளாவில் 12 வயது பார்வையற்ற சிறுவன் ஒருவன், பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான்.



கேரளாவில் உள்ள அலுவா நகரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில், நவ்நீத் (12) என்ற சிறுவன் படித்து வருகிறான்.

நீச்ச செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவன், பார்வையை இழந்த போதிலும் தனது பயிற்சியாளரின் தீவிர பயிற்சியால் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்துள்ளான்.



தனது பயிற்சியாளரின் அறிவுரையை காதால் கேட்டபடியே அவன் பயிற்சி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.



பயிற்சியாளர் கூறுகையில், பார்வையில்லா சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பது சவாலான விஷயமாக இருந்தாலும், நவ்நீத்தின் தந்தை அளித்த ஒத்துழைப்பு காரணமாகவே 12 நாளில் நவ்நீத்துக்கு நீச்சல் பயிற்சி அளிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.