பேசிக் கொண்டிருந்தபோது வெடித்து சிதறிய அப்பிள் ஐபோன் : பொலிசார் விசாரணை!!

297

Iphone

இந்திய ஹரியானா மாநிலத்தில் நபர் ஒருவர் அப்பிள் ஐபோன்-6ல் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த போன் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானாவில் குர்கானை சேர்ந்த உணவக உரிமையாளர் கிஷன் தனது காரில் ஐபோன்-6ல் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென போனில் இருந்து தீப்பொறி வெளிப்பட்டதை பார்த்த அவர், உடனடியாக போனை வெளியில் எறிந்துள்ளார்.

அடுத்த சில வினாடிகளிலேயே அந்த போன் வெடித்து சிதறியுள்ளது. மேலும் கிஷனின் கட்டை விரலில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அப்பிள் நிறுவனமும் விசாரனை மேற்கொண்டு வருகிறது.