வவுனியா அண்ணாநகர் ஜெப ஆலயமிஷன் முன்பள்ளியின் விளையாட்டு விழா 27.06.2015 சனிக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ரிப்ஹான் பதுதின் கலந்துகொண்டதுடன், கௌரவ விருந்தினராக கலாநிதி மொகமட் ஷறிப் அனிஸ் ( கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானத் துறை பேராசிரியரும், கைத்தொழில் வணிக அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர்),
சிறப்பு விருந்தினராக கலாநிதி எஸ்.சந்திரகுமார் (கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்புச் செயலாளர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் ஜெப ஆலய முன்பள்ளியின் ஸ்தாபகரும் வணக்கத்துக்குரிய பிதாவுமான திருமதி.சந்தானப்பிள்ளை, பெற்றோர் சங்கத்தின் தலைவர் கௌசிகன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.