இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (30.06.2015) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
காலை 5.30 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகம் ஆரம்பமாகி 7 மணியளவில் வசந்தமண்டபப் பூசையுடன் உள்வீதி வலம்வந்த அம்மன் 9 மணியளவில் தேரேறி 11 மணியளவில் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தார்.
இத் தேர்த் திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஒழுங்குகளை ஆலய பரிபாலன சபையினர் ஒழுங்கு செய்துள்ளனர்.
-நயினாதீவிலிருந்து வவுனியா நெற் செய்திகளுக்காக பண்டிதர்-