3ம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் திகதியில் மாற்றம்!!

298


School

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 3ம் தவணைக்காக செப்டம்பர் 9ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் மற்றைய பாடசாலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி மீளத் திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.