யுவதியை பற்றைக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் தலைமறைவு!!

309

Abuse

வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக அழைத்துச் சென்று புதருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பாலாவி பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் மதுரங்குளி முக்குத் தொடுவா எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உடபடுத்தப்பட்டவராவார்.

கடந்த 29ம் திகதி திங்கட்கிழமை பகல் குறித்த யுவதி மாம்புரி தளுவ பிரதேசத்தின் குடியிருப்பு பகுதிக்கு முச்சக்கர வண்டியொன்றில் சென்றுள்ளார். அங்கிருந்து அவ்யுவதி தனது நிரந்தர வசிப்பிடமான முக்குத்தொடுவா பிரதேசத்திற்குச் செல்லும் குறுகிய தூர வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை தளுவ கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் அவ்யுவதியை பலவந்தமாக முறையில் அருகிலிருந்த புதர் பகுதியினுள் அழைத்துச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த யுவதி சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை தான் அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதோடு அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.