வவுனியாவில் முதன் முறையாக சக்தி வானொலி கேட்டால் தங்க காசுதான் என்னும் புதிய பரிசு திட்டத்தின் ஊடாக இன்று 04.07.2015 சனிக்கிழமை நேயர்களை தேடிச்சென்று தங்க காசு வழங்கிய நிகழ்வு வவுனியாவின் பலபகுதிகளிலும் இடம்பெற்றது.
வவுனியாவில் பேருந்துகள் மற்றும் கடைகள் முச்சக்கரவண்டிகள் மற்றும் நேயர்களின் வீடுகளுக்கு சென்ற சக்தி வானொலி குழுவினர் தங்க காசு வழங்கி நேயர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர் .
மேற்படி நிகழ்வில் சக்தி வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான தேவசகாயம் செல்டன் அன்டனி தலைமையிலான குழுவினர் வவுனியாவின் பல பகுதிகளிலும் தங்க காசு வழங்கும் நிகழ்வில் ஈடுபட்டனர்.
வவுனியா நெற் செய்திகளுக்காக வித்தகன்